search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுப்பாடு"

    • பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உள்ள 6-வது வார்டில் ஞானபுரம், பச்சைபாளிமேடு பகுதி உள்ளது. இங்குள்ள நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அதுவும் தண்ணீர் மிகக்குறைந்த நேர அளவிலேயே திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து 3 வாரத்திற்கு மேல் இதேநிலை நீடித்ததால் பகுதி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென கனிராவுத்தர் பகுதியில் உள்ள ஈரோடு-சக்தி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் போட்டனர். இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள், அதேபோல் சத்தியமங்கலம், கோபியில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், தாசில்தார் ஜெயக்குமார், வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் கடந்த 3 வாரமாக சீரான குடிநீர் வராததால் பல்வேறு வகையில் அவதி அடைந்து வருகிறோம். எனவே சீரான முறையில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அப்போது குடிநீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பதாகவும், தற்போது தான் அது குறித்து தெரிய வந்துள்ளதாகவும், உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ளலா

    சென்னை:

    சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

    அதனால் 8-ந்தேதி காலை 6 மணி முதல் 9-ந் தேதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரக் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எவ்வித தடையின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.
    • 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த மழையால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    குறிப்பாக தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டிணம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, நெல்லை- திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


    2 மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைபட்டது. இதைப்போல மின்வினியோகம், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ள சேத பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் அறிவித்தார்.

    மேலும் மத்திய குழுவினரும், நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சாலை, மின்வினியோகம், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தூத்துக்குடி நகரில் புதிய பஸ்நிலைய பகுதிகள், குறிஞ்சி நகர், இந்திராநகர், பச்சாது நகர், பாரதிநகர், தங்கமணிநகர், காந்திநகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் இன்னும் வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.


    சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நகரில் பல இடங்களில் இயல்புநிலை திரும்பினாலும் வெள்ளம் வடியாத பகுதிகளில் 9-வது நாளாக இன்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம் சாலையில் குளம் போல் வெள்ளநீர் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    தொடர்ந்து வெள்ளத்தில் நடப்பதால் கால்களில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்தப்பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    புன்னக்காயல் உள்ளிட்ட சில கிராமங்களில் 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் நிவாரண முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் பலர் வீடுகள் இழந்தும், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் ஏற்பட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    • 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
    • லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளமானது தாமிரபரணி ஆற்றில் கரை புரண்டு ஓடியது.

    இந்த வெள்ளத்தினால் ஆற்றில் குடிநீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த உறைகிணறுகள் மூழ்கியது. பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரையிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூழ்கி அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தன. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    மேலும் பல்வேறு வகையான கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் எடுத்துச்செல்ல ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாய்களும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வெள்ளம் சற்று தணிந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகளில் மோட்டார்கள் பழுது பார்க்கப்பட்டு குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக ஆறுகளில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்த கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் தொழில்நுட்ப குழு வரவழைக்கப்பட்டது. அதன்படி 9 பேர் கொண்ட குழு வந்து 2 நாட்களாக குடிநீர் திட்டங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் உறைகிணறுகளை சுற்றிலும் நீர் அதிகமாக இருந்தாலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொழில்நுட்ப குழுவினர் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு பணி செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    • அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளது. பெரியாறு பாசன கால்வாயின் தண்ணீரை நம்பி இங்கு 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. ஒருபோக பாசன பகுதியான இங்கு வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பெரியாறு கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பெரியாறு மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் 80 சதவீத விவசாயம் பெரியாறு பாசன கால்வாய் மூலம் நடந்து வருகிறது. தற்போது மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயின் கடை மடை பகுதியான மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் தங்கள் பகுதிக்கு மட்டும் அதிகாரிகள் தண்ணீர் திறக்காமல் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது.

    மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் அரசு அதிகாரிகளை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் மேலூரில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    பெரியாறு கால்வாய் தண்ணீரை நம்பி பயிரிட்டு உள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்தது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தொடர் கோரிக்கையை வலியுறுத்தி மேலூரில் இன்று (27-ந்தேதி) கடையடைப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர். இதற்குமேலூர் வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல சரக்கு, நகை, ஜவுளிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தினசரி மார்க்கெட்டும் இன்று செயல்படவில்லை. 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். கடையடைப்பு போராட்டத்தால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை யூனியன் அலுவலகம் எதிரே உள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.

    அவர்கள் அங்கிருந்து பேரணியாக பொதுப் பணித்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோஷமிட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தண்ணீரை பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.

    • கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.
    • குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சதுமுகை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலத்துகோம்பை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சதுமுகை ஊராட்சி அலுவலகத்தில் சென்று புகார் அளித்தனர்.

    ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், குழந்தைகளை வைத்துள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆலத்து கோம்பை பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சதுமுகை ஊராட்சி மன்ற தலைவி சத்யாவின் கணவர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சிவராஜை சூழ்ந்து கொண்டு அப்பகுதி மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் இன்று மாலைக்குள் சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    • கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.
    • பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த காக்களூர் ஊராட்சிக்கு திருவள்ளூர் ஹம்சா நகர் ஏரியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இதற்காக தனி பைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.

    இதுகுறித்து காக்களூர் பொதுமக்கள் ஊராட்சி மற்றும் அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை குடிநீர் குழாய் இணைப்பு மாற்றப்படவில்லை.

    இதனால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டுள்ளது.
    • நகரத்தின் பல கூடுதல் பகுதிகள் அதிக நிலத்தடி நீர் மட்டத்தை கொண்டிருப்பதை காட்டுகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கடந்த வாரம் ஆலந்தூர் 96 மி.மீ., பெருங்குடி 58 மி.மீ., அடையாறு 56 மி.மீ. ஆகிய இடங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டுள்ளது.

    தற்போதைய நிலத்தடி நீர் மட்டம் ஆலந்தூரில் உள்ள புதுத்தெருவில் 0.97மீ, வேளச்சேரி ராஜலட்சுமி நகரில் 0.5 மீ, மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் 0.7 மீ மற்றும் பள்ளிக்கரணையில் உள்ள ஐ.ஐ.டி. காலனியில் 0.4 மீ. உள்ளது. இந்த நீர்நிலைகள் ஆழமற்ற நீர் நிலைகளில் உள்ள நீரின் அளவை காட்டுகின்றன.

    ஆழ்துளை கிணறு தோண்டும் போது, ஆழ்துளை கிணறுகளை கட்டி, 30 மீட்டர் உயரத்துக்கு செல்கிறார்கள். 5 மீட்டருக்குள் இருக்கும் ஆழம் குறைந்தவற்றை பயன்படுத்த தயங்குவது இல்லை.

    ஆழமற்ற நீர்நிலைகளில் உள்ள நீர், ஆழமான நீர் நிலைகளில் உள்ளதை விட தூய்மையானது.

    இது குறித்து கோட்டூர்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் 2021-ம் ஆண்டு பருவமழையின் போது நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக இருந்ததால் எனது வீட்டின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. இது போன்ற சூழ்நிலையை தடுக்க மக்கள் ஆழமற்ற நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்துவதற்கான நேரம் இது என்று தெரிவித்தார்.

    குடிநீர் வாரிய புள்ளி விவரங்களின் படி வளசரவாக்கம் மற்றும் மணலி மண்டலங்களில் நகரத்தின் பல கூடுதல் பகுதிகள் அதிக நிலத்தடி நீர் மட்டத்தை கொண்டிருப்பதை காட்டுகிறது.

    எடுத்துக்காட்டாக வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள நொளம்பூரில் நிலத்தடி நீர் 0மீ. அதாவது மேற்பரப்புக்கு சற்று கீழே உள்ளது. கட்பாக்கம் நீர் மட்டம் 0.3மீ. ஏனென்றால் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் அளவு குறைவாக காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர் உயர்வாக உள்ளது.

    அடர்த்தியான பகுதிகளை எடுத்து கொண்டால் நீர் மட்டம் குறைவாக இருக்கும் சவுகார்பேட்டை, பிராட்வேயில் நீர்மட்டம் 10 மீட்டருக்கும் அதிகமாக உள்ளது.

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராமநாதசுபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முழு குடிநீர் தட்டுப் பாட்டை போக்கிடும் வகை யில் தமிழ்நாடு அரசு சார் பில் ரூ.2,819 கோடி மதிப் பீட்டில் சிறப்பு கூட்டு குடி நீர் திட்டம் ஒப்புதல் அளிக் கப்பட்டு கடந்த மே மாதம் 2-ந்தேதி நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தொடங்கப்பட் டுள்ளது.

    மேல்நிலை தொட்டிகள்

    அந்த வகையில், ராமநாத புரம் நகராட்சியில் ரூ.229 கோடி மதிப்பீட்டில் தொடங் கப்பட்ட சிறப்பு கூட்டு குடி நீர் திட்டப்பணிக்காக கான் சாகிப் தெரு, கோட்டை மேடு, சிங்காரம் தோப்பு ஆகிய மூன்று இடங்களில் 50 லட்சம் மதிப்பீட்டில் 14.5 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட இருக்கி றது.

    இதையொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக கட்டுமான பணி பூமி பூஜைக்கு குடிநீர் வடிகால் வாரிய மண்டல ஒருங்கி ணைப்பாளர் ஜெ.பாலாஜி தலைமை தாங்கினார்.

    இந்த திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கி டலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்த லைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் ரெங்கராசு, ராமநாத புரம் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன்,

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாள ரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான நகராட்சி கவுன்சிலர் முகம் மது ஜஹாங்கீர் (எ) ஜவா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் தொழிலதிபர் என்.திருமாறன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ.பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் கலந்துகொண்டனர்.

    • முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்துகவுண்டம் பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்துகவுண்டம் ஊராட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து ஈரோடு-வெள்ளக்கோவில் ரோடு, முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    • நீர் சுத்திகரிப்பு நிலையம், அணுசக்தி துறையின் தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டது.
    • திருக்கழுக்குன்றம் பி.ஜே.பி பிரமுகர் தனசேகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில், மத்திய அரசின் "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ், 15லட்சம் ரூபாய் செலவில், சதுரங்கபட்டினம் மீனவர் குடியிருப்பு, காவாக்கரை, கல்பாக்கம் கே.வி-2 ஸ்கூல், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை ஆகிய நான்கு இடங்களில் மக்கள் பயன்படுத்த சுத்தமான குடிநீர் வசதிக்காக தலா 500லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், அணுசக்தி துறையின் தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டது.

    அவைகளை மக்களின் பயன்பாட்டிற்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார். சதுரங்கபட்டினம் ஊராட்சி தலைவர் ரேவதி சாமிநாதன், திருக்கழுக்குன்றம் பி.ஜே.பி பிரமுகர் தனசேகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • தண்ணீரை உறிஞ்சி குடிநீருக்கு பயன்படுத்தவும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரப்பவும் குடிநீர் வாரியம் திட்டமிட்டது.
    • மழைக்காலம் தொடங்கினால் தண்ணீர் எடுக்கும் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் 25 கல் குட்டைகளில் மழை நீர் பெருமளவு தேங்கி கிடக்கிறது.

    இந்த தண்ணீரை உறிஞ்சி குடிநீருக்கு பயன்படுத்தவும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரப்பவும் குடிநீர் வாரியம் திட்டமிட்டது.

    இதன்படி கல்குட்டை தண்ணீரை உறிஞ்சி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து சென்னையில் குடிநீருக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த பணிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. குவாரிகளில் மிதவை மோட்டாரை அமைத்து அங்கிருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

    தினசரி ஒரு கோடி லிட்டர் வீதம் கடந்த 3 நாட்களில் 3 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது.

    தற்பேதைய கட்டமைப்பு மூலம் தினமும்3 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்ச வசதிகள் இருப்பதாகவும், ஆனால் ஒரு கோடி லிட்டர் மட்டுமே உறிஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்னும் ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் எடுக்கப்படும். இடையில் மழைக்காலம் தொடங்கினால் தண்ணீர் எடுக்கும் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    ×